ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார, ஐ.தே.கட்சியில் இணைந்தார்
– அஹமட்-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டவருமான மனுஷ நாணயகார, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றைய தினம் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கடிதமொன்றின் மூலம், மனுஷ நாணயகார அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில், தற்போதைய அரசாங்கம் குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள நிலைபாட்டினை சுட்டிக்காட்டியுள்ள மனுஷ நாணயகார, புதிய அரசாங்கமானது அரசியலமைப்புக்கு முரணானது என, பல்வேறு தரப்புக்களும் கூறுவது பற்றியும் மேற்கொள் காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தனது பிரதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ள மனுஷ நாணயகார, அலறி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதேவேளை, மேற்படி தனது முடிவு குறித்து மனுஷ நாணயகார, வீடியோ பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.