ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் 39 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; 03 மாதங்களில் பதிவு

🕔 May 4, 2018

லங்கையில் மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் டிலானி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவர்களில் 39 பேர் ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் எச்.ஐ.வி. தொற்குக்கு உள்ளாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல்  மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியினுள் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாலியல்சார்  நோய் மற்றும் எச்.ஐ.வி  தடுப்புப் பிரிவின் கூறுகையில்,

“கடந்த வருடம் இதே முதல்  மூன்று  மாத காலப்பகுதியில் இனங்கானப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆகும். எனினும் இவ்வருடம் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களில் 39 பேர் ஆண் ஓரின சேர்க்கையின் மூலம் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

பொது மக்களுக்கு இவ்விடயம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி  தொற்று நோய் தடுப்புப்பிரிவினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வருடத்தில் தாயிடமிருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவிய சம்பங்கள் எவையும் பதிவாகவில்லை என்பது குறிப்படத்தக்கதாகும்.

அதனடிப்படையில் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுதல் குறைவடைந்துள்ள  நாடு என்ற வகையில்,  உலக சுகாதார அமைப்பிடமிருந்து இவ்வருட இறுதியில் அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்களும்  முன்னெடுக்கவுள்ளன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்