208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும்

🕔 December 3, 2017

நிலுவையிலுள்ள 208 உள்ளுராட்சி சபைகளுக்குரிய வேட்புமனுக்களுக்கான அழைப்பு, நாளை திங்கட்கிழமை விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், குறித்த சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

நாளைய தினம் 208 உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களக்கான அழைப்பு விடுக்கப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்மையினால், 93 உள்ளுராட்சி சபைகளுக்கு மட்டுமே, இதுவரையில் வேட்புமனுக்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்