சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம்

🕔 November 11, 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் – 

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு நடவடிக்கையாக இன்று சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் பணிமனையில் இளைஞர்களுக்கான மாநாடு நடைபெற்றதையடுத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, உள்ளுராட்சி மன்றத்தைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம். அஸீம் உள்ளிட்ட பலர் மேற்படி இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் இறுதியில், இளைஞர்களும் பொதுமக்களும் கைகோர்த்து, சாய்ந்தமருது நகர மத்தியில் பாரிய மனிதசங்கிலிப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்