ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம்

🕔 October 12, 2017

– எம்.வை. அமீர் –

க்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம்) மற்றும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதே ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இப்பிரதேசங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையிலேயே, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைவாக  குறித்த பிரதேசங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற விடயங்களை இணைத்தலைவர்கள் மேற்கொள்வார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்