அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது

🕔 July 21, 2017
– றிசாத் ஏ காதர் –

கில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம்,  நாளை சனிக்கிழமை, கல்முனை தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பகரமான நிலையை சீர்செய்யும் பொருட்டு, முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு, நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் கையொப்பமிட்டு, எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றினை அண்மையில் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவின் தலைமையில், சங்கத்தின் முகாமைத்துவ சபை கூட்டம், நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முகாமைத்துவ சபைக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம், சங்கத்தின் செயலாளருடைய கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவருக்கு எதிராக முறைப்பாடு; முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்