கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 June 17, 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவுக்க வருகின்றன.

அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் பதவிக் காலம் செப்டம்பர் 08, சப்ரகமுவ மாகாண சபையின் சபையின் ஆட்சிக் காலம் செப்டம்பர் 28, வட மத்திய மாகாணத்தின் ஆட்சிக் காலம் ஓக்டோபர் 01 ஆம் திகதியும் நிறைவடையவுள்ளன.

மாகாண சபைகளுக்கான தேர்தலை சட்டப்படி ஒத்திவைப்பதற்கு சந்தர்ப்பங்கள் இல்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்