வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

🕔 December 3, 2016
sumanthiran-975– பாறுக் ஷிஹான் –

டக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என்றும் கூறியுள்ளார்.



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு தொடர்பில் விளக்கமளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக, முஸ்லிம் தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் யுத்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் முஸ்லிம்களின் மனங்களில் காணப்படுகின்றன. அந்த உணர்வுகள் முஸ்லிம் மக்களிடமிருந்து களையப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதனால் புதிய அரசியலமைப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கான பொறிமுறை முன்வைக்கப்படுவதன் மூலம், எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்