தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக் கைது
ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜாமத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது இன்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளார்.
பிற மதங்களைப் புண்படுத்தும் வகையில் பேசினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தையில் நொவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போதே, இவர் இவ்வாறு நடந்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.
ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளமைக்கு எதிராக, மேற்படி ஆர்ப்பாட்டத்தினை தவ்ஹித் ஜமாத் அமைப்பு நடத்தியிருந்தது.
கொம்பனித் தெருவினை சொந்த இடமாகக் கொண்ட, 30 வயதுடைய மேற்படி நபர் ராசிக், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.