தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார்
🕔 October 21, 2016
தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொறவெவ பகுதியில் முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்,கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஏ.எல்.எம். நஸீர், ஆரியவதி கலப்பதி,மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.