ராஜா என்றவர்கள், ஓநாய் என்கிறார்கள்: மஹிந்த ராஜபக்ஷவின் கவலை

🕔 October 3, 2016

Mahinda - 0134முன்னர் தன்னை பலமிக்க ராஜா என்று அழைத்தவர்கள், இப்போது  ஓநாய் என அழைக்கிறார்கள் எனக்கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார்.

வெலிகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“நாங்கள் முன்பு ஆரம்பித்து வைத்திருந்த அபிவிருத்தி திட்டங்களையே, தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எனது அரசாங்கம்தான் க்றீன் பல்கலைக்கழகம் நிர்மாணிக்க தீர்மானித்திருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் – அது அவர்களுடைய யோசனை என தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டை நடத்தி வருகின்றது.

இந்த வகையில் , நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அடுத்து கைது செய்யப்படவுள்ளார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்