நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு

🕔 August 22, 2016

Musammil - 09877தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முஸம்மில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராக முஸம்மில் கடமையாற்றியபோது வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில், வாக்குமூலமொன்றினைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 50 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முஸம்மில், கடந்த வாரமளவில்தான் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்