முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம் 20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.