விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்கிழமை மாலை இவர் அனுமதிக்கப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிருந்து, இவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடனடி பரிசோதனைகளின் நிதிதம்தம் இவர் – இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திவிநெகும திணைக்களத்தின் நிதியில்இ டம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.