வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; சம்பந்தன்

🕔 July 11, 2016

Sambanthan - 013டக்கு – கிழக்கு இணைப்பினை முஸ்லிம் தலை­வர்­களும் மக்­களும் ஏற்­றுக் கொள்ள வேண்டுமென்று, தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித் தலைவரு­மான ரா.சம்பந்தன் தெரி­வித்தார்.

தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்காகவே, தாம் வடக்கு – கிழக்கு இணைப்பை கோருவதாகத் தெரிவித்த அவர்,  தமிழர்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்க வேண்­டு­மென்ற காரணத்துக்காக நாம் அவ்­வாறு கூறவில்லை என்றும் சொன்னார்.

இதேவேளை, ஒரு பக்­கு­வா­மான படித்த முஸ்லிம் நபரை,  எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­க­ இருக்­கின்றோம் என்றும், அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தமிழ் சங்­கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தமிழ் பேசும் மக்களின் பிர­தே­சங்­களில் பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்­டார்கள். விசேடமாக கிழக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றங்கள் மிகவும் தீவி­ர­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. தமிழ் மக்கள் இந்த நாட்­டி­லி­ருந்து கூடு­த­லாக வௌியே­று­வ­தற்கு முன்­ன­தாக இறு­தி­யாக மக்கள் தொகை மதிப்­பீடு 1981ஆம் ஆண்டே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

எமது நாட்டில் 1947ஆம் ஆண்­டுக்கும் 1981ஆம் ஆண்­டுக்­கு­மி­டை­யி­லான காலப்­ பகுதியில் சிங்­கள மக்­களின் இயற்கை ரீதி­யான அதி­க­ரிப்பு 2.5 வீத­மாகும். இக்காலத்தில் கிழக்கு மாகா­ணத்தில் சிங்க மக்­களின் இயற்கை ரீதி­யான அதி­க­ரிப்பு 09 வீத­மாகும். தற்­போது வட­மா­கா­ணத்­திலும் அவ்­வி­த­மான நிகழ்­வு­களை நிறைவேற்று­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

இக்­கா­ர­ணத்தின் நிமித்தம்தான் வடக்கு – கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை திட­மாக வலியு­றுத்தி வரு­கின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். முஸ்லிம் தலை­வர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.தமிழர் ஒருவர்தான் முதலமைச்சராக இருக்க வேண்­டு­மென்ற கார­ணத்­திற்­காக நாம் அவ்­வாறு கூறவில்லை.

ஒரு பக்­கு­வா­மான படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் எப்போம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். எமது பெரும்­பான்மை பாதுகாக்கப்படு­வது சந்­தே­கத்­துக்கு இட­மின்றி உறுதிப்ப­டுத்­து­வ­தாக இருந்தால், வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண்டும். அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மென்­பதை அன்­பா­கவும் தாழ்­மை­யா­கவும் கேட்­டுக்­கொள்ள விரும்புகின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்