திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு
திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினமும் வெசாக் போயா தினம் வருகின்றமையினால், எதிர்வரும் திங்கட்கிழமையன்று அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது.
எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பபுகளை கருத்திற்கொண்டு, திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முடிவை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.
காலநிலைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் யாரேனும் இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருந்தால், அவர்களின் பணியை ஏனைய அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.