முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி 0
– ஹஸ்பர் ஏ ஹலீம் – அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.