பேரினவாதத்தின் குறுக்கு வழி 0
– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகியிருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டிருக்கிறார்கள். காடையர்கள் ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கியமைக்கு நிகராக, உளரீதியான தாக்குதல்களும்