தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்
![](https://puthithu.com/wp-content/uploads/2015/10/Ahathiya-Exam-01.jpg)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜூன் 14ம் திகதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
ஜனவரி 31, 2025 அன்று, 11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உதவித்தொகைக்கு தகுதி பெறுவார்கள்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://onlineexams.gov.lk/eic இல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.