நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை

🕔 March 27, 2023

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்லுமாறு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியமை தொடர்பாக, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று, ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஹொரன நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்யவதற்காக பூசாரி ஒருவருக்கு – குறித்த சட்டத்தரணி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில் இருந்த போது, தன்னுடன் பழகிய பூசாரிக்கு – மேற்படி ஒப்பந்தத்தை குறித்த சட்டத்தரணி வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹொரன பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பூசாரி முறைப்பாடு செய்ததை அடுத்து – விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்