உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25இல் நடைபெறாது: ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி

🕔 March 19, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறாது என்று சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நொவம்பரில் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று (18) இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

“தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல. கூடிய விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவோம். இருந்தபோதிலும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவது சாத்தியமில்லை. ஜனாதிபதித் தேர்தல் நொவம்பரில் நடைபெறும் என்று என்னால் கூற முடியும்” என்றார்.

“நாடு முழுவதும் உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 8,000 உறுப்பினர்கள் உள்ளனர், அந்தத் தொகை நாட்டுக்கு சுமையாக உள்ளது. ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கைகள் தொடரும்” என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்