ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம்

🕔 March 14, 2023

ரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை இம்மாதம் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில், பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.

அதன் பின்னர் ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மாகாணசபைகளின் ஊடாக – மாகாண அடிப்படையில் பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்