கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம்

🕔 November 14, 2022

– எஸ்.எல். அப்துல் அஸீஸ் –

ல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்திய சாலைக்கு புதிய வைத்தியசாலை அபிவிருத்தி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

15.06.2022 ஆந் திகதி தொடக்கம் – எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு தொழிற்படும் வகையில், இந்த குழுவை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல நியமித்துள்ளார்.

கல்முனை பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பின்வரும் அங்கத்தவர்கள் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

01. பேராசிரியர் ஏ.எம். ரஸ்மி (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

02. சட்டத்தரணி சாரிக் காரியப்பர்

03. வைத்தியர். எம். ஷாஹீர் ஜமால்தீன் (சனா)

04. எம். ஐ. ஏ. ரசாக் – அதிபர், (அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்)

05. ஏ.எல். ஜாபீர் – அதிபர் (ஸாஹிரா கல்லூரி – தேசிய பாடசாலை)

06. எம்.எம்.எம். காமில் – முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் (தென் கிழக்குப் பல்கலைக்கழகம்)

07. எம்.எம். சமீலுல் இலாஹி – இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்

08. கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ்- சிரேஸ்ட விரிவுரையாளர் (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

09. எம்.சி.எம். ஜுனைட் – மிருக வைத்தியர் நிபுணர்

10. ஏ.எம். நௌபல் – வீதி அபிவிருத்தி அதிகார சபை

மேற்படி அபிவிருத்திக் குழுவில் இருந்து, பின்வரும் அங்கத்தவர்கள் அதன் நிருவாக உறுப்பினர்களாகவும் ஏனைய அங்கத்தவர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

01. பேராசிரியர் ஏ.எம். ரஸ்மி (தலைவர் )
02. சட்டத்தரணி சாரிக் காரியப்பர் (உப தலைவர்)
03.. ஜனாப். எம். ஐ.எம். ரசாக் – அதிபர் (பொருளாளர்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்