நாட்டில் மதுப் பாவனையில் சடுதியான வீழ்ச்சி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

🕔 September 28, 2022

துப் பாவனை நாட்டில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதுவரித் திணைக்களத்துக்கு நேற்று (27) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் – அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, ஊடங்களுக்கு கருத்துவெளியிட்ட மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி; 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மது விற்பனையில் 22 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்