கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

🕔 September 27, 2022

ட்டுநாயக்க விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த போதே, இவர் கைதாகியுள்ளார்.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் – சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றுள்ளார்.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்