சஊதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் ஞானசார தேரர்: விருந்திலும் கலந்து கொண்டார்

🕔 September 24, 2022

ஊதி அரேபிய தேசிய தின நிகழ்வையொட்டி கொழும்பிலுள்ள அந்த நாட்டு தூதரகத்தில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில், முஸ்லிம் சமூகத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கலந்து கொண்டார்.

ஞானசார தேரர், முஸ்லிம் ராஜதந்திரிகளுடன் அமர்ந்து அவர்களுடனும் மற்றவர்களுடனும் இந்த நிகழ்வில் கலந்துரையாடியதைக் காணமுடிந்ததாக கொழும்பு கசற் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொதுபல சேனா அமைப்பின் அதிகாரி டிலந்த விதானகேயும் கலந்து கொண்டார்.

அங்கு வழங்கப்பட்ட விருந்திலும் ஞானசார தேரர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையின் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்