இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கல்முனை விகாரதிபதி கைது: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

🕔 September 14, 2022

– பாறுக் ஷிஹான் –

ளம் பிக்குகள் மூவரை பாலியல்  துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கல்முனை பௌத்த விகாரையின் பிரதம விகாரதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கல்முனை பௌத்த விகாரையில் வைத்து வைத்து 03 இளம் பிக்குகளை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது கைது செய்யப்பட்ட மேற்படி பௌத்த பிக்கு நேற்று (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்  முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 03 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸார்  நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள குறித்த விகாரையில் புதிதாக இணைந்த  03 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு  கல்முனை ஆதார  வைத்தியசாலையில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) இறுதி பகுதியில்  இளம் பிக்குகளை – அவர்களின்  பெற்றோர்  அனுமதித்திருந்தனர்.

பின்னர் குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது  வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான  தனியான சிகிச்சை பிரிவுக்கு 03 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக  மாற்றப்பட்டு,  சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேற்படி 03 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த பிக்குவினால்  பாலியல்  துஸ்பிரயோகத்துக்கு ஆளாகிதாக தெரிவித்திருந்தனர்.

இதேவேளை 03 இளம் பிக்குவினரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் – மருத்துவ அறிக்கையின் பிரகாரம் செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில்,  மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளைமேற்கொண்டனர்.

இதன் பின்னர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம், செப்டம்பர் 05 ஆந் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு மருத்துவ அறிக்கை அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்கான தயார் படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய 03 இளம் பிக்குகளும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபரான பௌத்த மதகுரு தொடர்பில் நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் பெற்றோர் – ஏற்கனவே  வழங்கிய  முறைப்பாட்டுக்கு அமைய, அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த  விசேட பொலிஸார் நேற்று கல்முனை பகுதியில் உள்ள  குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று  விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை  பெற்று, அவரை கைது செய்திருந்தனர். 

பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான சகோதரர்களான  08 , 13 , 14 வயது மதிக்கத்தக்க 03 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை  புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்