நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் லீட்டர் எரிபொருட்கள் சிக்கின:137 பேர் கைது

🕔 May 25, 2022

ட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் உட்பட 50,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருட்களுடன் 137 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சோதனை நடவடிக்கைகளின் போது இந்த எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையின் போது மொத்தம் 27,000 லீட்டர் பெற்றோல், 22,000 லீட்டர் டீசல் மற்றும் 10,000 லீட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருட்களை சில நபர்கள் பல்வேறு வழிகளில் பெற்று, பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டன.

இதுபோன்ற முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் 119, 118 மற்றும் 1997 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

எரிபொருளில் கலப்படம் செய்த சம்பவங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்