வைத்தியசாலையிலும் என்னைத் தாக்கினார்கள்; கையில் 69 எனும் இலக்கத்தை யாரோ ஒட்டி விட்டார்கள்: மே 09 சம்பவம் தொடர்பில் மஹிந்த கஹந்தகம தெரிவிப்பு
கோட்டா கோ கம எதிர்ப்பாளர்களை தாக்குவதற்காக தான் காலி முகத்திடலுக்கு சென்றதாக கூறப்படுவத கொழும்பு மாநகரசபையின் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மறுத்துள்ளார்.
கொழும்பில் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
கோட்டா கோ கம எதிர்ப்பாளர்களை தாக்குவதற்காக தான் காலி முகத்திடலுக்கு செல்லவில்லை என அவர் இதன்போது கூறியுள்ளார்.
“நான் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மாநகர சபைக்கு வந்தேன். அதன் பின்னரே சபையில் இருந்து வெளியில் வந்த நான் தாக்கப்பட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில்வைத்தும் தான் தாக்கப்பட்டதாகவும், அங்கு யாரோ ஒருவர் தனது கையில் 69 என்ற இலக்கத்தை ஒட்டியதாகவும் மஹிந்த கஹந்தகம குற்றம் சுமத்தியுள்ளார்.