அமைச்சுப் பதவியேற்றுள்ள ஹரீன், மனுஷ ஆகியோரை கட்சியிலிருந்து நிறுத்த தீர்மானம்: ஐ.ம.சக்தி செயலாளர் தெரிவிப்பு

🕔 May 20, 2022

மைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று 09 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றிருந்தனர்.

இவர்களில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் அடங்குவர்.

புதிய அரசாங்கத்தின் – நாட்டுக்கான நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதுடன், புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், கட்சித் தீர்மானத்தை மீறியமைக்காக அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ஹரின், மனுஷ உள்ளிட்ட 09 பேர் அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்