கையில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு பணத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு

🕔 May 19, 2022

நாட்டில் இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அதன்படி, மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக் கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேற்கண்டவாறு மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இரு வார கால அவகாசம் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு வாரத்தின் பின்னர் உரிய தொகையைக் காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும் என்றும், அது அவர்கள் கையில் வைத்திருக்கும் தொகையை விடவும் அதிகமானதாக இருக்கலாம் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்