நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக ஆகியோருக்கு விளக்க மறியல்

🕔 May 18, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக போட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவ மாநகர சபை ஊழியர் ஒருவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்