பெற்றோலுக்காக இன்று வரிசையில் நிற்க வேண்டாம்

🕔 May 18, 2022

பெற்றோல் விநியோகம் இன்றைய தினம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கனியவளக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வழமையான எரிபொருள் விநியோகம் நாளை தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பெற்றோல் தாங்கிய கப்பலொன்று, இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டீசல் தாங்கிய 02 கப்பல்கள் அடுத்த 02 வாரங்களில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் நாடுமுழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றைய தினமும் மூடப்பட்டிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்