அமெரிக்காவில் கறுப்பினர்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

🕔 May 15, 2022

மெரிக்காவின் பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது  பெயரை பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டை ‘வன்முறையான பயங்கரவாத செயல்’ என்று  அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கூறுகிறது.

இந்த சம்பவத்துக்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் சனிக்கிழமை பிற்பகல் சூப்பர் மாக்கெட்டினுள்  நுழைந்தார். இந்த தாக்குதலை அவர் இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்ய – ஒரு கேமராவை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“இந்தச் சம்பவத்தை வெறுப்புணர்வு குற்றமாகவும், இன ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாதமாகவும் கருதி  நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பின் பஃப்பலோ அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியான ஸ்டீபன் பெலோங்கியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியை அடைய, சந்தேக நபர் பல மணி நேரம் பயணம் செய்து வந்ததாக நம்பப்படுகிறது.  இந்த சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் கறுப்பினத்தவர்கள் என்று பஃப்பலோ நகர காவல்துறை ஆணையர்  ஜோசப் கிராமக்லியா கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்