பிரதமர் பதவிக்காக சுயாதீன நாடாளுமன்ற குழு பிரேரித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை

🕔 May 12, 2022

சுயாதீன நாடாளுமன்ற குழுவினால் பிரதமர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டிருந்த பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டவில்லையென சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுயாதீன நாடாளுமன்ற குழுவினரின் கூட்டம் நேற்று (11) இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நேற்று இடம்பெற்ற சுயாதீனக் குழு கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை பிரதமர் பதவிக்காக ஜனாதிபதியிடம் முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பெயர்ப்பட்டியல் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏலவே தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்