மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தினார்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரின் பாதுகாப்புக் கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் இன்று பேசிய அவர்; “இயல்புநிலை திரும்பிய பிறகு, அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்” என்றும் கூறியுள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமில் மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்திருப்பதாக நேற்றைய தினமே செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனையடுத்து குறித்த கடற்படை முகாம் பகுதியில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்தகது.
இதேவேளை, தனது தந்தை நாட்டை விட்டும் தப்பிச் செல்ல மாட்டார் என, மஹிந்த ரஜபக்ஷவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை நினைவு கொள்ளத்தக்கது.