நாட்டில் நடந்த வன்முறைகளில் 09 பேர் பலி; 219 பேர் காயம்: பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவிப்பு

🕔 May 11, 2022

நாட்டில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாலியனவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 136 வீடுகள் மற்றும் கட்டங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன என்றும் கமல் குணரட்ண கூறியுள்ளார்.

அதேபோன்று 61 வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன, 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதுவரை நடந்த வன்முறைச் சம்பவங்களில் 219 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்