சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை

🕔 February 7, 2022

ருபது மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து இன்று (07) மேன்முறையீட்டு நிதிமன்றில் இந்தப் பிணை கிடைத்துள்ளது.

சட்டமா அதிபர் பிணை வழங்க சம்மதித்திருந்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்று புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி அப்போது கூறியிருந்தார்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோருமாறும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.

ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணி ஏனைய தரப்பினருடன் சமரசம் செய்து கொள்ள இணங்கியதையடுத்து, புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி 20 ஆம் திகதி, சட்டமா அதிபர் திணைக்களம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, ​​பிரதிவாதிகள் புத்தளம் மேல் நீதிமன்றில் – பிணை விண்ணப்பம் செய்தால் மாத்திரமே பிணை வழங்கப்படும் என, சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஏப்ரல் 2020இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார் எனக் கூறபட்டு சட்டத்தரணி ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்த நிலையில்; அவர் இன வெறுப்பை ஊக்குவித்ததாக பின்னர் குற்றம் சாட்டப்பட்டார். இது இலங்கையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு அவர் 10 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்