சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

🕔 January 28, 2022

யங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

இருந்தபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில்  பிணை கோாிக்கை முன்வைக்கப்பட்டால் அதற்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கபோதில்லை என, சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே, ஹிஜாஸுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளத்திலுள்ள மதரஸா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்தார் எனும் குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்