கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

🕔 January 3, 2022

– நூருல் ஹுதா உமர் –

ல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த சாலின் மௌபியா, தேசிய காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வு தேசிய காங்கிரசின் தலைமையகமான கிழக்கு வாசலில் நேற்று (02) இடம்பெற்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில், தோடம்பழ சின்னம் சுயேச்சைக்குழுவில் 19ஆம் வட்டாரத்தில் வெற்றிபெற்ற முஹர்ரம் பஸ்மீர், மூன்று வருடங்கள் உறுப்பினராகப் பதவி வகித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து வெற்றிடமான அந்த உறுப்பினர் பதவி நீண்டகாலமாக நிரப்பாமல் இழுபறியில் இருந்துவந்தது.

இந்த நிலையிலேயே அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மௌபியா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சாத்தியப் பிரமாண நிகழ்வில் தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவரும், வக்பு சபை உறுப்பினருமான டொக்டர் ஏ. உதுமாலெப்பை, சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம், செயலாளர் அப்துல் மஜீத் (ரோஷன் மரைக்காயர்), கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.ஆர்.ஏ. அஸீஸ், ஏ.ஆர்.எம். அஸீம், என்.எம். றிஸ்மீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்