உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை

🕔 December 25, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த 13 பேர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தங்களது உத்தியோகபூர்வ இல்லத்தை மீள கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தனர்.

குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து – மேற்படி நபர்களின் பொருட்கள் அகற்றப்படாமல் உள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த விடயம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டும், அவர்கள் அந்த இல்லங்களை காலி செய்யவில்லை.

குறித்த 13 பேரில் பெரும்பாலானோர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்