திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண்

🕔 December 25, 2021

– மப்றூக் –

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 04ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (24) இரவு 11.40 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த – சார்ஜன் குமார என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் இருவர் சிங்களவர்கள், ஒருவர் தமிழர் மற்றொருவர் முஸ்லிம்.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம என்பவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தனது வாகனத்தில் தப்பித்து, மொனராகல மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான எதிமலயிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ரி56 துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைக் கூடுகள் 19 ஆகியவற்றுடன் இவர் சரணடைந்துள்ளார் எனத் தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்