பொதுபல சேனா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தொடர்ந்தும் தடை
இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு ‘பேஸ்புக்’ தடை விதித்துள்ளது.
அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள், சிங்ஹலே மற்றும் பொதுபலசேனா ஆகிய அமைப்புகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இவ்வாறு பேஸ்புக் தமது விதிமுறைகளுக்கு ஏற்ப, தடை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மேற்படி அமைப்புகளுக்கு கடந்த காலங்களிலும் பேஸ்புக் தடை விதித்திருந்தது.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணிக்கு பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுபல சேனாவுக்கான பேஸ்புக்கின் தடை நீடிக்கப்பட்டுள்ளது.