மூழ்கும் கப்பலில் ஏறுமளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை: பிரதமர் பதவி குறித்த பேச்சுக்கு ரணில் பதில்

🕔 December 9, 2021

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்; “மூழ்கும் கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுமாறும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அவர் கூறினார்.

“ஏடுகளில் எழுதப்பட்ட கணக்கு விபரங்களில் எவ்விதமான பலனும் இல்லை. மக்களிடம் பணம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. மக்கள் மயப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி விரைவாக செல்ல வேண்டும்.

நல்லாட்சி காலத்தில் அதிகமான கடன் தொகை செலுத்தியமையால் அபிவிருத்தி வேகம் மட்டுப்பட்டது. ஆனால் மூன்று வேளையும் உணவை மக்கள் தடையின்றி பெற்றுக்கொள்ள கூடிய பொருளாதார சூழலை உருவாக்கினோம்.

பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை. எனவே கட்சியை மறுசீரமைக்கும் பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுங்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்