எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம்

🕔 December 2, 2021

– ஐ.எல்.எம். நாஸிம் –

ம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி முதலாம் கிராம சேவையாளர் பிரிவல் இன்று (2) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக இன்று காலை 10 மணியளில் அடுப்பை எரிய வைத்தபோது குறித்த விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுப்பை எரிய விட்டு வெளியில் வந்து வேறு வேலை செய்து கொண்டிருந்த வேளை, அவர்களது சமையலறையில் சத்தம் கேட்டதையடுத்து, அங்கு போய் பார்வையிட்டபோது, குறித்த அடுப்பு வெடித்து சிதறியிருந்ததைக் கண்டதாக, அந்தக் குடும்பத்தினர் கூறினர்.

குறித்த எரிவாயு வெடிப்பு சம்பவத்தின் போது, யாரும் பாதிக்கப்படவில்லை.

இது தொடர்பாக சம்மாந்துறை பொலிசாருக்கும் கிராம சேவகர் அலுவலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்