தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

🕔 September 30, 2021

தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

தோஹா ஒப்பந்தத்தின் படி, தலிபான்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், ஆப்கான் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தாலிபன்கள் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கான் தரப்பில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

நேற்று (29)) பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் கூட்டம் நடந்த போது, அக்குழுவின் முன்னிலையில் இக்கருத்துகளை அவர் முன்வைத்தார்.

கடந்த பிப்ரவரி 2020-ல் தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தோஹாவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்குலகப் படைகள் பின்வாங்கின.

அந்த ஒப்பந்தம் ஆப்கன் படைகள் மற்றும் ஆப்கன் அரசின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க ராணுவ படைத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் ‘மெக்கென்ஸி’யும் கூறியுள்ளார்.

இவர்தான் ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கும் நடவடிக்கையை மேற்பார்வை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைக் குறைக்க ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டமை தீவிர விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் ஜெனரல் ‘மெக்கென்ஸி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்