காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி
கொரோனாவால் மரணித்தவர்களுக்கென, சுற்றுச் சூழலுக்குப் பதிப்பற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’ சவப்பெட்டிகளின் ஏற்றுமதியை இலங்கை இன்று (24) தொடங்கியது.
கடந்த மே மாதம் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை, இந்த கார்போட் சவப்பெட்டிகளை அறிமுகப்படுத்தியது.
இதற்கிணங்க, மொத்தம் 1200 காட்போட் சவப்பெட்டிகள், முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இலங்கைக்கான வியட்நாம் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், வியட்நாமிலுள்ள இலங்கை வம்சாவளி பௌத்த பிக்குகள் மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகரசபை தலைவர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் விளைவாக இந்த ஏற்றுமதி நடைபெற்றது.
தற்போது இலங்கையில் மேற்படி காட்போட் சவப்பெட்டிகள் நாடளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, காட்போட் சவப்பெட்டிகளை உருவாக்கி அவற்றை நகர சபையில் அறிமுகப்படுத்திய பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.