ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

🕔 September 21, 2021

ஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் 05 மேல் நீதிமன்றங்களில் இதுவரை 09 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினரும் கூறிய குற்றச்சாட்டுகளை தான் கடுமையாக மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் தொடர்பாக 23,700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இரண்டரை வருடங்களில் மேற்கொள்ள விசாரணைகளில் – தான் திருப்தி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்