றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

🕔 June 11, 2021

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, அவர்களினால் குறித்த மனு தாக்கல் செய்யட்டுள்ளது.

அந்த மனு நீதியரசர்களான, எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரிதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன முதலான மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனு மீதான விசாரணையை நீதியரசர்கள் ஆயம் ஒத்தி வைத்துள்ளது.

ஏப்ரல் 24ஆம் திகதி அதிகாலை, றிசாட் பதியுதீன் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, இதுவரையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அவர் கைது செய்யப்பட்டு 49 நாட்கள் ஆகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்