துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு;
01) எஸ்.ஆர். ஆட்டிகல – திறைச்சேரி செயலாளர்
02) கலாநிதி பிரியன் பந்து விக்கிரம – நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர்
03) சாலிய விக்கிரசூரிய – இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர்
04) துஷான் கொடிதுவக்கு – ஓரல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்
05) எஸ். ஜெராட் ஒன்டச்சி – மர்கன்டைல்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்
06 ரொஹான் டி சில்வா – மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்